For Daily Alerts
Just In
லண்டனில் டிவி நடிகையை கற்பழித்த இந்திய மாணவருக்கு 10 ஆண்டு சிறை: இங்கிலாந்து கோர்ட் அதிரடி
இங்கிலாந்தில் படித்து வந்தவர் இந்தியரான சோபி ஜான்(25). அவர் லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதிநேர போர்ட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த டிவி நடிகை ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் அவர் ஹோட்டல் அறைக்கு சென்று போதையில் தூங்கிவிட்டார்.
அப்போது சோபி வேறு ஒரு ஊழியரின் கீ கார்டை பயன்படுத்தி நடிகையின் அறைக்குள் சென்று அவரை கற்பழித்தார். மேலும் அவர் அந்த நடிகையை போட்டோவும் எடுத்தார். இது குறித்த வழக்கு சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நீதிபதி ஆலிஸ்டர் மெக்ரீத் முன்பு நடந்தது.
வழக்கை விசாரித்த அவர் சோபி ஜானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். சோபி இங்கிலாந்தில் சிறை தண்டனை காலத்தை கழித்த பிறகு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.
Comments
English summary
A 25-year-old Indian student has been sentenced to 10 years in jail by a British court for raping a TV star in her hotel room after a birthday party. Soby John, a porter, used another worker's key card to let himself in before attacking the woman celebrity as she slept after a night of heavy drinking with her friends.
Story first published: Thursday, April 18, 2013, 11:26 [IST]