டெல்லி சிறுமிக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் 2 பேர் 2 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

Delhi shame: Two people gang-raped ‘Gudiya’, say reports
டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமியை ஒருவர் அல்ல இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமியை அவர் குடியிருக்கும் வீட்டின் தரைதளத்தில் குடியிருக்கும் மனோஜ் குமார்(22) என்ற வாலிபர் கடத்தி தனது வீட்டில் அடைத்து வைத்து 2 நாட்களாக உணவு, தண்ணீர் கொடுக்காமல் சிறுமியை கற்பழித்தார். இதையடுத்து சிறுமியின் உடலுக்குள் பாட்டில், மெழுகுவர்த்தி ஆகியவற்றை திணித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

இதற்கிடையே போலீசார் மனோஜ் குமாரை பீகாரில் வைத்து நேற்று கைது செய்தனர். விசாரணையில் மனோஜ் குமாருடன் சேர்ந்து பிரதீப் குமார் என்பவரும் சேர்ந்து சிறுமியை சீரழித்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பிரதீப்பை கைது செய்ய தனிப்படை பீகார் விரைந்துள்ளது. சிறுமி கற்பழிப்பு சம்பவத்தை கண்டித்து நேற்று டெல்லியில் போராட்டங்கள் நடந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+