For Daily Alerts
Just In
ஆப்கானிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்- 9 பயணிகளை சிறைபிடித்த தலிபான்கள்
காபூல்: துருக்கியைச் சேர்ந்த பயணிகள் ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.
துருக்கியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் நகரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்பார்வையிட அதன் அதிகாரிகள் குழு கோஸ்ட் நகருக்குச் சென்றுவிட்டு காபூலுக்கு ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தது.
அப்போது ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து அது அஸ்ர் நகரில் அவசரமாகத் தரையிறங்கியது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரைச் சூழ்ந்த தலிபான்கள் அதில் இருந்த 9 பேரையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
இவர்களை விடுவிக்க தலிபான்கள் பணம் கேட்பதாகத் தெரிகிறது.
Comments
English summary
Taliban insurgents have seized nine people from a civilian helicopter which made an emergency landing in eastern Afghanistan, officials said Monday. The Turkish civilian helicopter made an emergency landing on Sunday evening, said Rais Khan Sadeq, deputy police chief of Logar province south of Kabul.
Story first published: Monday, April 22, 2013, 12:05 [IST]