ஜேன்ஸ் விருதை பெற்றது சென்னை விமான நிலையம்!
சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு சர்வதேச விருதுகளில் ஒன்றான ஜேன்ஸ் விருது கிடைத்துள்ளது.
ஆசிய பசுபிக் நாடுகளின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மாநாடு ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்ட்ராம் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா உட்பட 15 நாடுகளின் விமான போக்குவரத்து சேவை நிறுவனங்கள் மற்றும் விமான போக்குவரத்தை வழிநடத்தும் சேவை நிறுவனங்கள் கலந்து கொண்டன.

அரபிக் கடல், இந்திய பெருங்கடல் வான் வெளியில் விமானிகள் தங்களின் விருப்பமான வழித்தடங்களை உருவாக்கி விமானங்களை இயக்குவது, பயண நேரம் மற்றும் விமானங்களை இயக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் மாசுக்களை கட்டுப்படுத்துவது; எரிபொருள் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான போட்டிகள் மற்றும் தகுதித் தேர்வுகள் இம் மாநாட்டில் நடத்தப்பட்டன. இதில் முதல் இரண்டு பிரிவுகளில் இந்திய விமான நிலைய ஆணையக் குழுவும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையும், ஜேன்ஸ் விருதுகளை பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications