மதுபாட்டில்களை கழுத்தில் அணிந்து கலெக்டரிடம் மனு கொடுத்த பாஜகவினர்
நெல்லை: நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி பாஜ மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் இசக்கியம்மாள் தலைமையில் அக்கட்சியினர் கழுத்தில் மதுபாட்டில்களை அணிந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில் தமிழகத்தில் டாஸ்மாக்கில் மது அருந்தி வி்ட்டு வாகனங்களை தாறுமாறாக ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதனால் உயிர், உடல், சொநதபந்தங்களை இழக்கும் அப்பாவி பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உததரவி்ட்டது.
கோர்ட் விதித்த கெடு முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும் நெல்லை மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக கடைகள் அகற்றப்படவில்லை.
சுமார் 40 கடைகள் ஆளும் கட்சி மற்றும் அதிகார பலத்தால் திறந்து வைத்துள்ளனர். இவற்றையும் மூட வேண்டும் என அந்த மனுவில கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications