இங்கிலாந்தில் இறந்த ’போபோ’ மூலம் பெண் பாண்டா ’டயன் டயன் ’க்கு செயற்கை கருவூட்டல்

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் மிருககாட்சி சாலையில் ஆண், பெண் என 2 பாண்டா கரடிகள் உள்ளன. இவை கடந்த 2011-ம் ஆண்டு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டன.
பெண் பாண்டாவுக்கு டயன் டயன் என்றும், ஆண் பாண்டாவுக்கு யங் குவாஸ் என்றும் பெயரிட்டுள்ளனர். இயற்கை முறையிலான செக்ஸ் உறவு மூலம் பெண் பாண்டா கரடி டயன் டயன் கர்ப்பம் அடைந்து குட்டி ஈனும் என எதிர்பார்க்கப்பட்டது.
பொதுவாக ஏப்ரல் மத்தியில் இருந்து மே மாதம் வரை தான் பாண்டா கரடிகளின் இனப்பெருக்க காலமாகும். ஆனால் பெண் பாண்டா கரடி டயன்டயனுக்கு ஆண் பாண் டாவுடன் செக்ஸ் உறவுக்கு நாட்டமில்லை. எனவே பெண் பாண்டா கரடிக்கு செயற்கை முறையில் கருவூட்டல் நடத்த மிருக காட்சி சாலை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 20-ந்தேதி பெண் பாண்டாவுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் நடத் தப்பட்டது. இதனால் சென்ற வருடம் பெர்லின் மிருகக்காட்சி சாலையில் இறந்த போ போ என்ற 34 வயது கரடியின் விந்தணுக்களைக் கொண்டு டயன் டயன் செயற்கை முறையில் கருவூட்டப்பட்டிருக்கிறது.
அதை தொடர்ந்து பெண் பாண்டா கரடியின் கர்ப்பம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது கர்ப்பம் தரித்தால் வருகிற ஆகஸ்டு இறுதியிலோ, அல்லது செப்டம்பர் தொடக்கத்திலோ குட்டிகளை ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications