கர்நாடகத்தை 5 ஆண்டுகளில் கொள்ளையடித்துவிட்டது பாஜக: ராகுல் காந்தி

ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகளாக முறைகேடாக ஆட்சியை நடத்திய பாஜக மக்களைப்பற்றியோ, மாநிலத்தின் நலனைப் பற்றியோ கவலைபடவே இல்லை. ஆனால் முறைகேடாக மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் அந்த கட்சி குறியாக இருந்தது. தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக மறந்துவிட்டது. வளர்ச்சிப் பணிகளை முடக்கி போட்டனர். அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர். இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
டெல்லியில் ஊழல் குறித்து வாய்கிழிய பேசும் பாஜக தலைவர்கள் கர்நாடகா மாநிலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கின்றனர். மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அமரும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தேர்தலில் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் செயல்படுத்த மறந்த அனைத்து வளர்ச்சி பணிகளை காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் செயல்படுத்தப்படும். வட கர்நாடகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 371 பிரிவு சட்டமசோதாவை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றி தந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 8 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும், கடந்த 5 ஆண்டுகாலம் கர்நாடகத்தை கொள்ளையடித்த பாஜகவுக்கு மீண்டும் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications