ஹெலிகாப்டர் ஊழல்: மாஜி தளபதி தியாகி, உறவினர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்
Subscribe to Oneindia Tamil

இந்திய விவிஐபிக்கள் பயணம் செய்ய இத்தாலி நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ. ரூ. 3,600 கோடி ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இத்தாலியில் பின் மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைவரும், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் தலைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ரூ. 3,600 கோடி ஹெலிகாப்டர் பேரத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 360 கோடி லஞ்சம் கொடுத்ததாக அசிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் இந்த லஞ்சத்தை வாங்கியதை உறுதி செய்து அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்தனர்.
இந் நிலையில், வழக்கு விசாரணையை திசை திருப்பாமல் இருக்கவும், முறைகேடு நடக்காமல் தடுப்பதற்காகவும், தியாகி உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளை சிபிஐ முடக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications