புனே: ஸ்பெஷல் கிளாஸுக்கு வந்த 15 வயது மாணவி வகுப்பறையில் கற்பழிப்பு

Subscribe to Oneindia Tamil

புனே: மகாராஷ்டிராவில் 15 வயது மாணவி பள்ளி வகுப்பறையில் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது ஷிரூர். அங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் 15 வயது மாணவி அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார். பத்தாம் வகுப்புக்கு போகும் மாணவர்களுக்கு தற்போது சிறப்பு வகுப்புகள் நடந்த வருகிறது. ஷிரூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மாணவி வகுப்புக்கு வழக்கம் போல் நேற்று சைக்கிளில் வந்துள்ளார்.

சைக்கிளை நிறுத்திவிட்டு பள்ளி வளாகத்தில் தண்ணீர் குடிக்கச் சென்ற மாணவியை 12ம் வகுப்பில் தோல்வி அடைந்த பிம்பர்கேத் கிராமத்தைச் சேர்ந்த வைபவ் நாராயண்(20) இழுத்துச் சென்று ஏழாம் வகுப்பறையில் வைத்து கற்பழித்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவி இடத்தை விட்டு நகராமல் அங்கேயே அதிர்ச்சியில் இருந்துள்ளார்.

இதற்கிடையே மாணவியின் மாமா ஏதேச்சையாக பள்ளிக்கு வந்தபோது வகுப்பில் அவரைக் காணவில்லை. வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டபோது மாணவி காலையிலேயே பள்ளிக்கு கிளம்பிவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து உறவினரும், ஆசிரியர்களும் சேர்ந்து மாணவியைத் தேடினர். அப்போது ஏழாம் வகுப்பறையில் அவர் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வைபவை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+