பாக். அரசிடம் 'ரகசிய ஊதியம்' பெற்ற பத்திரிகையாளர்கள் பட்டியலை வெளியிட்டது உச்சநீதிமன்றம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டு செய்தித் துறை அமைச்சகத்தின் ரகசிய நிதியைப் பெற்று வரும் பத்திரிகையாளர்கள் பட்டியலை அந்நாட்டு உச்சநீதிமன்றம் பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறது.
2011-12ஆம் ஆண்டு ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசாங்கத்தால் ஊடகத்துறையினருக்கு பணம் கொடுக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தக் கோரி 2 தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஒரு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது செய்தித் துறை அமைச்சகத்திடம் இருந்து பணம் பெற்ற பத்திரிகையாளர்கள் பட்டியலை உச்சநீதிமன்றம் வெளியிட்டது. மேலும் இந்த விவரங்களை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தமது இணையதளத்திலும் வெளியிட்டது. மொத்தம் ரூ177.98 மில்லியன் தொகை இப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் உச்சநீதிமன்றம் பகிரங்கப்படுத்தியிருக்கும் அந்த செய்தியாளர்கள் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டு இந்த ரகசிய நிதியை முடக்கி வைத்தும் ரகசிய நிதி யார் யாருக்கு கொடுக்கப்பட்டடு என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அந்நாட்டு செய்தித் துறை அமைச்சகம் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications