ஏர்வாடி தர்காவில் கடத்தப்பபட் குழந்தை கர்நாடகத்தில் மீட்பு: இளைஞர் கைது
ராமநாதபுரம்: ஏர்வாடி தர்காவில் கடத்தப்பட்ட 2 வயது ஆண் குழந்தையை கர்நாடகத்தில் போலீஸார் மீட்டுள்ளனர். குழந்தையைக் கடத்திய வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த இ்ப்ராகிம் மூஸாவின் மனைவி யாசின் ஜபினா (22) தனது மகன் முகம்மது சாயசின் என்ற குழந்தையுடன், 3 மாதத்திற்கு முன் தர்காவிற்கு வந்து தங்கியிருந்தார்.
கடந்த 19ம் தேதி குழந்தைக்கு பால் வாங்க, கடைக்கு ஜபினா சென்றார். திரும்பி வந்து பார்த்த போது குழந்தையைக் காணாவில்லை. இது குறித்து ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் ஜபினா புகார் செய்தார்.
இதையடுத்து தனிப் படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. தர்காவில் ஜபினா அருகில் தங்கி இருந்த கர்நாடக மாநிலத்த்தைச் சேர்ந்த அப்துல் நசீர் (22) என்ற இளைஞர் குழந்தை காணாமல்போன நாள் முதல் தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து இந்த வாலிபரைப் பிடிக்க கர்நாடகம் சென்ற தனி போலீஸார் நேற்று அவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்த குழந்தை முகம்மது யாசினையும் மீட்டனர்.
நசீரை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இன்று போலீசார் ஆஜர்படுத்தினர். அவனை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications