ஒடிஷாவில் குறுகிய தூர ஏவுகணை 'ஓஎஸ்ஏ-ஏகே' சோதனை வெற்றி

Subscribe to Oneindia Tamil

பலசூர்: தரையில் இருந்து பாய்ந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய ஓஎஸ்ஏ-ஏகே என்ற குறுகிய தூர புதிய ஏவுகணை இன்று காலை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.

ஒடிஷா மாநிலம் சந்திப்பூரில் தரையில் இருந்து பாய்ந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய ஓஎஸ்ஏ-ஏகே என்ற குறுகிய தூர ஏவுகணையை இந்திய விமானப்படை இன்று காலை சோதனை செய்தது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது என்று பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆளில்லா விமானங்களான லக்ஷ்யாவின் துணையுடன் இன்று இந்த சோதனை 3 கட்டமாக நடந்துள்ளது.

ஓஎஸ்ஏ-ஏகே ஏவுகணை இந்திய விமானப்படையில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+