ஒடிஷாவில் குறுகிய தூர ஏவுகணை 'ஓஎஸ்ஏ-ஏகே' சோதனை வெற்றி
Subscribe to Oneindia Tamil
பலசூர்: தரையில் இருந்து பாய்ந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய ஓஎஸ்ஏ-ஏகே என்ற குறுகிய தூர புதிய ஏவுகணை இன்று காலை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.
ஒடிஷா மாநிலம் சந்திப்பூரில் தரையில் இருந்து பாய்ந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய ஓஎஸ்ஏ-ஏகே என்ற குறுகிய தூர ஏவுகணையை இந்திய விமானப்படை இன்று காலை சோதனை செய்தது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது என்று பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானங்களான லக்ஷ்யாவின் துணையுடன் இன்று இந்த சோதனை 3 கட்டமாக நடந்துள்ளது.
ஓஎஸ்ஏ-ஏகே ஏவுகணை இந்திய விமானப்படையில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications