ஊழல் விவகாரத்தில் பாஜகவுக்கு சமரசமே கிடையாது: கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் அத்வானி

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அத்வானி போகும் இடமெல்லாம் ஊழலுக்கு பாஜக இடம் கொடுக்காது என்று பேசி வருகிறார்.
நேற்று பிஜாப்பூர், பெல்காம் மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் அத்வானி பேசுகையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில் வாஜ்பாய் பெயரை சேர்க்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது விசாரணையை திசை திருப்பும் முயற்சி. பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை அறிக்கையில் அவரது பெயர் இடம் பெற்றது மிகவும் வேதனைக்குரியது.
பாராளுமன்ற கூட்டுக் குழு தலைவர் தனது சுயநலத்திற்காக வாஜ்பாய் மற்றும் பாரதிய ஜனதாவின் பெயரை சேர்த்து இருக்கிறார். இது அரசியல் பழிவாங்கும் செயல். வாஜ்பாயின் பெயரை சேர்க்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது ஆகும். இதுகுறித்து பார்லிமென்ட்டில் விவாதிக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன்சிங் வரை பிரதமர் பதவி வகித்தவர்களில் மிக சிறந்த பிரதமராக வாஜ்பாய் செயல்பட்டார்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அப்போது எந்த குற்றச்சாட்டும் எழவில்லை. ஊழலை பொறுத்தவரையில் பாரதிய ஜனதா சமரசத்திற்கு இடம் தராது என்றார் அவர்,












Click it and Unblock the Notifications