For Daily Alerts
Just In
ஓடிப்போன தங்கை.. பழிக்குப் பழியாக தாய்- மகளை கற்பழித்த 4 பேர் கும்பல்
பீகார்: தங்கள் வீட்டு பெண்ணை கூட்டிக் கொண்டு ஓடிவிட்ட மகனை பழிவாங்க, அவனது தாயையும், தங்கையுயம் ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ளது.
பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டத்தில், தங்கள் வீட்டுப் பெண்ணை காதலித்து, கூட்டிக் கொண்டு ஓடிய மகன் எங்கு தங்கியுள்ளான் என்பது குறித்து தகவல் தராத தாயையும், தங்கையையும் கடத்திச் சென்ற 4 பேர் அடங்கிய கும்பல் ஒன்று, அவர்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
சம்பவம் நடைபெற்றது ஏப்ரல் 19 அன்று, ஆனால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட பின்னரே விஷயம் வெளியில் வந்தது.
இது குறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சுபாஷ் யாதவ், சுரேஷ் யாதவ் மற்றும் ரமீக்பாலி யாதவ் ஆகிய 3 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். நான்காவது நபரைத் போலீசார் தேடி வருகின்றனர்.
Comments
English summary
Three people have been arrested in Bihar for abducting and raping the mother and sister of a youth as a revenge for his eloping with the sister of one of the accused, police said on Wednesday.