கர்நாடக சட்டசபை தேர்தல்: நாளை சோனியா காந்தி பிரச்சாரம் !

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியும் தமது முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்திருக்கிறார்.
மே 2-ல் பெங்களூரில் கூட்டம்
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை கர்நாடகத்தில் பிரசாரம் செய்கிறார். சிக்மகளூர் மற்றும் மங்களூர் ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகிறார். பின்னர் மீண்டும் 30-ந் தேதி குல்பர்கா மற்றும் பெல்காம் மாவட்டங்களில் ஆதரவு திரட்டுகிறார். மே மாதம் 2-ந் தேதி மைசூர் மற்றும் பெங்களூரில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.
29-ல் மன்மோகன்சிங் பிரசாரம்
இதனிடையே பிரதமர் மன்மோகன்சிங் 29-ந் தேதி ஒரு நாள் மட்டும் தார்வார் மற்றும் பெங்களூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.












Click it and Unblock the Notifications