விளையாட்டு வினையானது: காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி
Subscribe to Oneindia Tamil
தானே: தானேவில் காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது, கார் பூட்டிக் கொண்டதில், 3 குழந்தைகள் மூச்சுத் திணறி பலியானார்கள்.
தானே மாவட்டம் கல்ஹார் கிராமத்தில், தங்கள் வீட்டின் அருகே, கார்கள் நிறுத்தப்பட்டிருந்த குடோனுக்குள் விளையாடச் சென்ற சிறுவர்கள், ஒரு காருக்குள் ஏறி விளையாடினர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார் பூட்டிக் கொண்டது. காருக்குள் சிக்கிக் கொண்ட குழந்தைகள் மூச்சுத் திணறி பலியானார்கள். இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
குழந்தைகளைக் காணவில்லை என உறவினர்கள் தேடியபொழுது உண்மை தெரியவந்தது.












Click it and Unblock the Notifications