நெல்லை மாவட்டத்தில் 2 மாதங்களில் 15 பேர் படுகொலை: பீதியில் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் பல்வேறு காரணங்களால் பல்வேறு பகுதிகளில் 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த மாதம் நேற்று வரை கள்ள தொடர்பாலும், சொத்து தகராறு, தேர்தல் முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 15 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தை விட கொலை எண்ணிக்கை இரட்டிப்பானது. கடந்த மாதம் 3ம் தேதி கல்லிடைக்குறிச்சி தெற்கு

புதுத்தெருவை சேர்ந்த முத்தையா, அவரது மகள் லெட்சுமி ஆகியோர் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டு காட்டு பகுதியில் கிடந்தனர்.

இதனை தொடர்நது கடந்த 7ம் தேதி விக்கிரமாசிங்கபுரத்தில் மீனாட்சிசுந்தரம் மகன் ஆட்டோ டிரைவர் முத்துகுமார் அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு கள்ள தொடர்பு காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கடையநல்லூரில் கனி, குமார் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டனர். இந்த சம்பவததில் வெட்டு காயங்களுடன்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்லத்துரையும் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்நதது. 13ம் தேதி நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் நடந்தை சந்தேகத்தில் மனைவி நல்லதாயை வெட்டி கொன்ற கணவர் சுப்பையா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது போன்று பல்வேறு சம்பவங்களில் நேற்று வரை 15 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். நாள் தவறாமல் அரங்கேறும் கொலை சம்பவங்களால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+