அவதூறு வழக்கு- விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகவில்லை விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

Vijayakanth not appears court in defamation case
விழுப்புரம்: விழுப்புரம் நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஆஜராகவில்லை.

விழுப்புரத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பொன்சிவா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் விஜயகாந்த் இன்று ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் விஜயகாந்த் இன்று ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். கட்சி பணி காரணமாக அவர் ஆஜராகவில்லை என்று வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜூன் 14-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி ஆவடி தியாகராஜமூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+