For Daily Alerts
Just In
மலேசியாவில் தமிழர் சுட்டுக்கொலை: ஆள்மாறாட்டமாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகம்
கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவா என்ற டாக்சி டிரைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆள்மாறாட்டம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என போலீஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஏ.சிவா (வயது 36), டாக்சி டிரைவர். இவர் தனது மனைவி, 8 வயது மகளுடன் மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வந்தார்.இவர் ஒரு உணவு விடுதியில் தனது மனைவி, மகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கே வந்த 2 முகமூடி ஆசாமிகள் சிவாவை சரமாரியாக சுட்டு கொன்று விட்டு தப்பினர்.மற்றொரு நபரை சுட்டுக்கொல்லும் முயற்சியில் சிவா தவறுதலாக பலியாகி இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Comments
English summary
A 36 years old tamil man Siva was killed by an unidentified gang in Kolalampur, Malaysia.
Story first published: Thursday, April 25, 2013, 11:49 [IST]