விருதுநகர் மு.க. ஸ்டாலின் கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு?

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், திமுக சார்பில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகரில் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வரும் மே 6-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேச உள்ளார். இதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திடலில் பந்தல் அமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அந்த பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின் கூட்டத்திற்கு சில காரணங்களை கூறி காவல்துறை சார்பில் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட காவல்துறையினர் கேட்ட விளக்கங்களுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பதில் அனுப்பப்பட்டும் கூட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட வில்லை என தெரிகிறது.
இதன் காரணமாகவே பந்தல் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின் பங்கேற்க விருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்ட தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications