Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரப்ஜித்சிங் மூளைச்சாவடைந்தார்...: பாகிஸ்தான் மருத்துவர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Sarabjit Singh is brain dead, Pak doctors say
லாகூர்: பாகிஸ்தான் சிறையில் தாக்குதலுக்குள்ளான இந்தியரான சரப்ஜித் சிங் மூளைச்சாவடைந்துவிட்டதாக பாகிஸ்தான் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் இந்தியரான சரப்ஜிதிசிங். அவரது தூக்கு தண்டனை 2008 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென சரப்ஜித் சிங் மீது சில கைதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். செங்கல் மற்றும் இரும்புக் கம்பிகளால் அவர்கள் நடத்திய தாக்குதலால் சரப்ஜித்சிங் ஆழ்ந்த கோமா நிலைக்குப் போனார். இதனிடையே அவரை மருத்துவமனையில் பார்க்க உறவினர்கள் சென்றிருந்தனர்.

இந்நிலையில் சரப்ஜித்சிங், மூளைச் சாவடைந்துவிட்டதாக பாகிஸ்தான் மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றனர். இதர உறுப்புகள் அனைத்தும் செயற்கை முறையில் இயங்க வைக்கப்பட்டு வருகின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்திய மருத்துவர்கள் குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பி சரப்ஜித்சிங்குக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர்கள் நேரில் சந்திக்கவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+