ஹைதராபாத்தில் 5 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 3 பேர் சேர்ந்து கர்ப்பிணியை பாலியல் பலாத்கராம் செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் மகபூப் நகர் மாவட்டம் அச்சம்பேட்டையச் சேர்ந்தவர் பார்வதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தனது கணவருடன் ஹைதராபாத் மதுரா நகரில் சாலையோர குடிசை ஒன்றில் வசித்து வந்தார். பார்வதி அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்தார். அவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று அவர் வீட்டில் தனியாக இருக்கையில் பைக்கில் ஒரு வாலிபர் வந்து வீட்டு வேலைக்கு 2 பெண்கள் தேவை என்று கூறி அழைத்துள்ளார்.

இதையடுத்து பார்வதியும், அவரது பக்கத்து வீட்டு பெண் லட்சுமியும் அந்த வாலிபருடன் செல்ல முடிவு செய்தனர். அவர்கள் 2 பேரும் அந்த வாலிபரின் பைக்கிலேயே கிளம்பினார். வாலிபரின் பின்னால் பார்வதியும், அவருக்கு பின்னால் லட்சுமியும் உட்கார்ந்தனர். பாலாஜி நகர் அருகே சென்றபோது அந்த வாலிபர் பைக்கை நிறுத்தி லட்சுமியை கீழை இறஙகுமாறு கூறினார். லட்சுமி கீழே இறங்கியதும் அந்த வாலிபர் பார்வதியுடன் பைக்கில் பறந்துவிட்டார். அங்குள்ள மைதானத்தில் வைத்து பார்வதியை அவர் கற்பழித்தார். தனது நண்பர்கள் 2 பேருக்கு போன் செய்து அவர்களை மைதானத்திற்கு வருமாறு கூறினார்.

அவர்கள் 2 பேரும் வந்து பார்வதியை பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பார்வதி மறுநாள் காலை தான் வீட்டுக்கு வந்தார். தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+