சிகாகோ: பரிசாக வந்த துப்பாக்கி- 5 வயது சிறுவன் விளையாட்டாகச் சுட்டதில் 2 வயது தங்கை பலி
சிகாகோ: விளையாட்டுத்தனமாக 5 வயது சிறுவன் உண்மையான துப்பாக்கியால் சுட்டதில் அவனது 2 வயது தங்கை பலியானாள். அத்துப்பாக்கி அவனுக்கு பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்கிழமை மதியம் கெண்டகியில் உள்ள ஒரு வீட்டில் 5 வயது அண்ணனும், அவனது 2 வயது தங்கையும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களது அம்மா வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாராம். அப்போது தவறுதலாக வீட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை கீழே மறந்து வைத்து விட்டார்.
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் இதை கவனித்து விட்டான். ஏனெனில் அத்துப்பாக்கி அவனுக்கு பரசாக வழங்கப்பட்ட ஒன்று. அம்மா அசந்த நேரமாக பார்த்து விளையாட்டுக்கு தங்கையை நோக்கிச் சுட்டுள்ளான். அங்கு தான் விதி விளையாடிவிட்டது. குண்டுகளால் நிரப்பப்பட்டிருந்த துப்பாக்கி உண்மையிலேயே வெடித்து விட்டது. குண்டடி பட்ட சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.
இது குறித்து அந்த அம்மா கூறும்போது, ‘ அதிகபட்சமாக மூன்று நிமிட இடைவெளிகூட இருக்காது. குப்பையை கொட்டுவதற்காக வெளியில் சென்ற நான், குண்டு பாயும் சத்தம் கேட்டு ஓடோடி வந்து பார்த்தேன். அங்கே...' என மேற்கொண்டு பேச இயலாமல் கண்ணீர் வடிக்கிறார்.
'தனக்கு பரிசளிக்கப் பட்டதால் அது தன்னுடைய பொம்மை என்ற எண்ணத்தில் சிறுவன் துப்பாக்கியை எடுத்துள்ளான். துரதிஷ்டவசமாக துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பபட்டிருக்கின்றன. மேலும் இது குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்' , என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வினையாகும் என்பதற்கோர் மற்றுமொரு உதாரணம் இச்சம்பவம். குழந்தைகளுக்கு பரிசளிக்கும் போது, என்னமாதிரியான பொருட்களை தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் மிகுந்த கவனம் தேவை. மேலும் குழந்தைகளின் கைக்கெட்டும் தூரத்தில் ஆபத்தான பொருட்களை வைக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு படிப்பினை.












Click it and Unblock the Notifications