ஊடுருவிய ராணுவத்தினரை திரும்பப் பெற முடியாது: சீனா பிடிவாதம்

லடாக் பகுதியில் உள்ள தீப்சாங் பள்ளத்தாக்கில் தெளலத் பெக் ஓல்டி பகுதியில் இந்திய எல்லைக்குள் 19 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊடுருவி 750 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீன ராணுவம் ஆக்கிரமித்து முகாம்களை அமைத்திருக்கிறது. மேலும் அப்பகுதி தங்களுக்கே சொந்தமானது என்றும் உரிமை கோரி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணுவ உயர் அதிகாரிகளுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர், பிரதமர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங் செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி அருகே சீன ராணுவம் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. லடாக் பகுதியில் முகாமிட்டிருக்கும் விவகாரம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சு நடத்தி வருகின்றன. விரைவில் நிரந்தரமான தீர்வு எட்டப்படும். படை வீரர்களை திரும்பப் பெறுவது தொடர்பாக குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றார்ர்.
மேலும் எல்லைப் பிரச்னை வரலாற்று ரீதியாக பல ஆண்டுகளாக உள்ளது. இப்பிரச்னை காரணமாக உறவு பாதிக்கப்படக் கூடாது என்று இருதரப்பும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளது. எல்லைப் பகுதிகள் முறையாக வரையறுக்கப் படாததால்தான் இதுபோன்ற பிரச்னைகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. எனவே, பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே இந்திய-சீன எல்லைப் பிரச்னைக்கு அமைதியான வழியில் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. இந்திய எல்லையில் சீனா ஊடுருவி உள்ளது பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் வென்ட்ரெல் நேற்று கூறுகையில், இந்தியாவும், சீனாவும் தங்கள் எல்லைப் பிரச்னை தொடர்பாக அமைதியான முறையில் பேசி தீர்வு காண்பதை அமெரிக்கா வரவேற்கிறது. இருதரப்பினரும் இப்பிரச்னைக்கு உரிய முறையில் தீர்வு காண அமெரிக்கா ஆதரவு தரும் என்றார் .
-
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications