கர்நாடக சட்டசபை தேர்தல்- நாளை வாக்குப் பதிவு- பலத்த போலீஸ் பாதுகாப்பு!

கர்நாடகவில் நாளை 223 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி, பிஎஸ்ஆர் காங்கிரஸ் (ஸ்ரீராமுலு) மற்றும் இடது சாரி கட்சிகளும் தங்களது வேட்பாளரை நிறுத்தியுள்ளன.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மாசுவராஜ், வெங்கையா நாயுடு, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆகியோரும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கர்நாடக ஜனதா கட்சி வேட்பாளர்களுக்காக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பிரசாரம் செய்தார். மஜத கட்சி வேட்பாளர்களுக்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. நாளை காலை 7மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மிகவும் பதற்றமானவை என கருதப்படும் 1,110 வாக்குசாவடிகளில் வெப் கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications