மகாத்மா காந்தியின் ஒரு துளி ரத்தத்தின் விலை ரூ. 10 லட்சம்
Subscribe to Oneindia Tamil

லண்டனில் உள்ள முல்லோக் மையத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய 50 நினைவு பொருட்கள், வரும் 21ம் தேதியன்று ஏலம் விடப்படவுள்ளது.
இவற்றில் காந்தியின் தோல் செருப்புகள், மிகவும் விரும்பி அணியும் நீண்ட துண்டு, போர்வை, கோப்பை, கரண்டி, முள்கரண்டி மற்றும் கப் உள்ளிட்டவையும் அடங்கும்.
இவை தவிர காந்தியின் ரத்த துளியும் கூட ஏலம் விடப்படவுள்ளது. இந்த ரத்தத்துளி அவர் தானம் செய்வதற்கு முன்பு எடுத்து பரிசோதிக்கப்பட்டதாகும்.
கடந்த 1924ம் ஆண்டு சுமதி முகர்ஜி என்பவருக்கு காந்தி ரத்த தானம் செய்தார். அப்பொழுது அவரது ரத்தம் ஒரு கண்ணாடி சிலேடில் எடுத்து மைக்ராஸ் கோப்பில் வைத்து பரிசோதிக்கப்பட்டது.அந்த ரத்த துளிகளே தற்பொழுது ஏலத்துக்கு வரவுள்ளது. இந்த ஒரு துளி ரத்தம் மட்டும் ரூ.10 லட்சத்துக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications