அஸ்வ்னி குமார், பவன்குமார் பன்சால் ராஜினாமா இல்லை: காங்கிரஸ்

நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையில் திருத்தம் செய்த விவகாரத்தில் சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இதேபோல் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் மருமகன் சிக்கியதால் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ராஜினாமா செய்ய வேண்டும்ன் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நேற்று 3 மணி நேரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவின் நெருக்கடிக்குப் பணிந்து அமைச்சர்கள் அஸ்வினி குமார், பவன்குமார் பன்சால் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டியது இல்லை என தீர்மானிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜக ஏவிவரும் அவதூறுகளுக்கு நாம் உரிய பதில் அளிப்போம் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸின் இந்த முடிவை பாஜக கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஊழல்வாதிகளைக் காப்பாற்றுகிற மத்திய அரசை அலிபாபாவும் 90 திருடர்களும் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார். பாஜகவின் மற்றொரு தலைவரான ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், ஊழல் அமைச்சர்களைப் பாதுகாக்கும் காங்கிரஸின் முடிவு அதிர்ச்சிக்குரியது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications