கணவனின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி- கள்ளக்காதலனுடன் கைது

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: மன்னார்குடியில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை கொடூரமாக அறுத்துக் கொலைசெய்த மனைவியைப் போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். மளிகைக் கடை வைத்திருந்தார். இவரது மனைவி 32 வயதான ஜெகதீஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 7 வருடமாகி விட்டது. குழந்தை எதுவும் இல்லை.

இந்த நிலையில் 27 வயதான வினோத் என்பவருடன் ஜெகதீஸ்வரிக்குத் தொடர்பு ஏற்பட்டது. இது கலைச்செல்வனுக்குத் தெரிய வந்து கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

2 நாட்களுக்கு முன்பு இரவு கலைச்செல்வன் கடையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது ஜெகதீஸ்வரியுடன் வினோத் இருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வன், வினோத்தை அடிக்கத் துரத்தினார். வினோத் மொட்டை மாடிக்கு ஓடினார்.

ஆனால் அங்கு வைத்து கலைச்செல்வனை ஜெகதீஸ்வரியும், வினோத்தும் மடக்கி நிறுத்தி, கத்தியை எடுத்து கலைச்செல்வனின் கழுத்தை அறுத்தனர். ரத்தம் பீறிட கலைச்செல்வன் துடித்து பிணமாக விழுந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் வினோத்தையும், ஜெகதீஸ்வரியையும் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+