ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நாடு முழுவதும் 31 ஊழல் வழக்குகள் பதிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக 31 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2011 முதல் இந்த வழக்குகள் தொடரப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லோக்சபாவில் மத்திய பொதுப் பணியாளர் நலத்துறை அமைச்சர் நாராயணசாமி எழுத்துமூலமாக அளித்த பதிலில், சிபிஐ அரசுக்குக் கொடுத்துள்ள தகவலின்படி, கடந்த 2011, 2012 மற்றும் 2013 மார்ச் மாதம் வரை ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் மீது 26 வழக்கமான ஊழல் வழக்குகள் மற்றும் 5 ஆரம்ப நிலை விசாரணை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த 31 வழக்குகளில் 13 வழக்குகளில் விசாரணை முடிவடைந்து விட்டது. 18 வழக்குகளில் பல்வேறு கட்டங்களில் விசாரணை நிலுவையில் உள்ளது.

8 வழக்குகளில் விசாரணைக்கு அனுமதி கோரி சிபிஐ காத்துள்ளது.

82 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர்களில் 47 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர். 35 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+