காடுவெட்டி குருவுக்கு ஒன்றரை நாள் போலீஸ் காவல்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: வன்னியர் சங்கத் தலைவரும் பாமக எம்.எல்.ஏவுமான காடுவட்டி குரு என்கிற ஜே. குருவை ஒன்றரை நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க திருக்கழுக்குன்றம் கோர்ட் அனுமதித்துள்ளது.
மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடந்த சித்திரை திருவிழாவின்போது வன்முறையை தூண்டியதாக பேசியதாக ஜெ.குரு மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜெ.குருவை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். ஒன்றரை நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து அவர் மாமல்லபுரம் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications