ராமதாஸை சந்தித்தார் மனைவி சரஸ்வதி... மகள்கள் கவிதா, காந்திமதியும் பார்த்தனர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மரக்காணம் கலவர வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை, அவரது மனைவி சரஸ்வதி, மகள்கள் கவிதா, காந்திமதி ஆகியோர் திருச்சி சிறைக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.

மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதன் பின்னர் விழுப்புரத்தில் மறியல் செய்தது தொடர்பாகவும் ராமதாஸ் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதேபோல மொத்தம் 8 வழக்குகளில் ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராமதாஸுக்கு இதுவரை ஒரு வழக்கில் மட்டுமே ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற வழக்குகளில் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ராமதாஸை அவரது சம்பந்தியும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமி, ராமதாஸின் மருமகளும், கிருஷ்ணசாமியின் மகளுமான செளம்யா அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறைக்குச் சென்று பார்த்தனர்.

நேற்று மனைவி சரஸ்வதி, மகள்கள் கவிதா, காந்திமதி ஆகியோரும் சென்று பார்த்து நலம் விசாரித்து விட்டு வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+