காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தற்காலிக குழு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

Centre to reply today on Cauvery River Water Management Board
டெல்லி: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிக குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில் இதை நிறைவேற்றுவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. தமிழக அரசின் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த 7-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த மாதம் தமிழகத்தில் பயிர் சாகுபடி காலம் தொடங்க உள்ளதால், காவிரி நதி நீரை அளவிட்டு வழங்குவதற்கு ஒரு பங்கீட்டு அமைப்பு தேவை என்றும் வாதிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் தேதியை வரும் இன்றுக்குள் அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழக அரசு மனு மீதான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வரை தற்காலிக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியும் இருந்தது. இதை ஏற்று தற்காலிக குழு ஒன்றை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இந்த தற்காலிக குழுவுக்கு மத்திய நீர்வளத்துறை செயலர் தலைவராக செயல்படுவார். இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில தலைமைச் செயலர்கள் இடம்பெறுவர் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இதில் ஆட்சேபனை எதுவும் இருந்தால் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+