பாமக இளைஞர் அணி செயலர் இரா. அருள் உட்பட 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
சேலம்: பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் இரா. அருள் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டத்தைக் கண்டித்து சேலம் நால்ரோடு பகுதியில் பாமகவினர் சாலை மறியலில் பாமகவினர் ஈடுபட்டனர். இது தொடர்பாக இரா.அருள் உட்பட 41 பேர் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.. அவர்களுக்கு அந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் இரா.அருள் உள்ளிட்ட 4 பேரை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்ததற்கான உத்தரவை சேலம் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ஏற்கெனவே தர்மபுரி மாவட்டத்தில் தரை பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த வழக்கில் பாமகவைச் சேர்ந்த சுரேந்தர் மற்றும் தீர்த்தலிங்கம் ஆகியோர் நேற்று முன் தினம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications