பிளஸ் டூ: இந்திய பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியின் 92% மாணவர்கள் தேர்ச்சி
Subscribe to Oneindia Tamil
மதுரை: பிளஸ் டூ தேர்வில் மதுரை இந்திய பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 92% பேர் தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளனர்.
மதுரையில் இந்திய பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படித்த பார்வையற்ற மாணவ்ர்களும் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இவர்களில் 92% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மகேஷ் ராஜா மற்றும் நாகராஜா ஆகிய மாணவர்கள் இருவரும் 85% மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
மேலும் 75% மதிப்பெண்களை 52% மாணவர்கள் பெற்றும் சாதனை படைத்துள்ளனர். இதேபோல் 60-75% இடையேயான மதிப்பெண்களை 36% பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications