சேலம்: மிட்நைட்டில் 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த குடிகார காமவெறியன் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே 80 வயது மூதாட்டியை மிட்நைட்டில் குடிபோதையில் பலாத்காரம் செய்த காமவெறியனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் தம்மம்பட்டி அருகே மல்லியகரை கோபாலபுரத்தில் 80 வயது மூதாட்டி செல்லம்மாள் நேற்று நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து ஊரான வேப்பிலைக்கொட்டை கிராமத்தைச் சேர்ந்த காய்கறி வியாபரி பழனிவேல் குடி போதையில் செல்லம்மாளை பலாத்காரம் செய்திருக்கிறார்.
இதில் செல்லம்மாள் மிகவும் கவலைக்கிடமானார். தகவல் அறிந்த பக்கத்து வீட்டார் சேலம் அரசு மருத்துவமனையில் செல்லம்மாளை அனுமதித்தனர்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பழனிவேலை இன்று கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications