நிருபரை மிரட்டிய பவன் குமார் பன்சால்

Subscribe to Oneindia Tamil

Pawan Kumar Bansal
சண்டிகர்: ரயில்வே வாரிய பேர ஊழலில் சிக்கி பதவியை இழந்த முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் சண்டிகரில், நிருபர் ஒருவரை மிரட்டியதாக புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பதவியை இழந்ததைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து சண்டிகர் திரும்பினார் பன்சால். அப்போது அவரை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அப்போது ஒரு நிருபர் பன்சாலின் குடும்பத்தினர் நிர்வகித்து வரும் நிறுவனங்கள் குறித்து கேள்வி கேட்டார். இதனால் கோபமடைந்த பன்சால், உங்களை தனியாக அழைத்துப் போய் விளக்கம் தரவா என்று கேட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பன்சாலுக்கு சண்டிகர் பிரஸ் கிளப் கண்டனம் தெரிவித்துள்ளது. பன்சாலின் பேச்சு மிரட்டல் வகையாக உள்ளது. எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரஸ் கிளப் கோரியுள்ளது.

மேலும் பாஜகவும் பன்சால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. பன்சால் சண்டிகர் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+