நவாஸ் ஷெரீப்புக்கு மன்மோகன் சிங் வாழ்த்து

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி வெற்றி பெற்றது. அந்தக் கட்சிக்கு அங்கு மெஜாரிட்டி கிடைத்து விட்டது. இதையடுத்து 3வது முறையாக ஷெரீப் பிரதமராகவுள்ளார்.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவர் அளித்து வரும் பேட்டிகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு தனது நாட்டை அனுமதிக்க போவதில்லை என்றும் கூறி வருகிறார் ஷெரீப்.
மேலும், 1999ம் ஆண்டு தனக்கும், அப்போதைய வாஜ்பாய் அரசுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு உயிர் கொடுக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஷெரீப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு வருகை தருமாறும் அவர் ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் ஷெரீப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications