சாமியாருக்கு எதிராக போராட்டம் - வன்முறையில் 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ரோடக்: மடாதிபதி ஒருவரை அப்பதவியிலிருந்து நீக்கக் கோரி ஹரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தி்ல வன்முறை வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கரோதா என்ற இடத்தில் இந்த வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அந்த சாமியாரின் பெயர் ராம்பால் மகாராஜ். இவர் ஆர்ய சமாஜ் மடத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவர் வேதங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டு வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள் மக்கள்.

இதுகுறித்து போராட்டத்தில் குதித்தவர்களில் ஒருவர் கூறுகையில், ராம்பாலை நீக்கக் கோரி நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். ஆனால் போலீஸார் எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினர். இதில் போராட்டம் நடத்திய பலரும் காயமடைந்தனர் என்றார்.

கடந்த 2006ம் ஆண்டு ராம்பால் கற்பழிப்பு, கொலை மற்றும் வன்முறை உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டவர். பின்னர் 2008ம் ஆண்டு அவர் ஜாமீனில் விடுதலையானார்.

இதையடுத்து மீண்டும் அவர் ஆசிரமத்திற்குத் திரும்பினார். ஆனால் இதை பக்தர்கள் விரும்பவில்ல. கிராமத்தினரும் போராட்டத்தில் குதித்தனர். நேற்று அனைவரும் திரண்டு ஊர்வலமாக ஆசிரமம் நோக்கிக் கிளம்பினர். இது வன்முறையில் முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+