கூட்டணியைத் தேடி நான் போகமாட்டேன்: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நேற்று இரவு திருப்பூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் விஜயகாந்த்தின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள் என்றார்.
என்னை பார்த்து யாருடன் கூட்டணி வைப்பீர்கள்? என்று கேட்கிறார்கள். கூட்டணி அமைக்க மற்றவரை தேடி நான் தான் போக வேண்டுமா? மற்றவர்கள் என்னுடன் கூட்டணி சேர வருவார்கள் என்றும் அவர் கூறினார்.
"மின்வெட்டு பிரச்சினை தமிழகம் முழுவதும் இருக்கிறது. மின்சார உற்பத்திக்கு காற்றையும், நீரையும் நம்பி இருக்கிறார்கள். விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் மின்சாரத்தை கொடுத்து விட முடியுமா? என்கிறார்கள். நிச்சயம் முடியும். நான் சொல்வதை விட, செயலில் செய்து காட்டுபவன். நான் என்ன செய்வேன் என்பதை இப்போது கூற முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications