மின்சார கோபுரம் சரிந்து விழுந்து வாலிபர் பலி
கயத்தாறு: கயத்தாறு அருகே சூரியமினுக்கனில் மின்சார கோபுரம் சரி்ந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயத்தாறு அருகே கங்கணாக்கிணற்றை சேர்ந்த மாரியப்பன் மகன் மூர்த்தி. காளிமுத்து மகன் ரமேஷ், மற்றும் ஜெயக்குமார்.இவர்கள் மூன்று பேரும் நாகர்கோவிலை சேர்ந்த காண்டிராக்டர் சிங்கராஜ் என்பவர் மூலம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மின்சார டவரில் வேலை பார்த்து வந்தனர்.
கயத்தாறு அருகே சூரியமினுக்கன் வழியாக செல்லும் டவரில் மூன்று பேரும் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரவிதமாக அவர்கள் நின்று கொண்டிருந்த டவர் சரிந்து விழுந்தது. இதில் மூர்த்தி, ரமேஷ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் 60 அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்தனர்.
படுகாயம் அடைந்த மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூர்த்தி அங்கு இறந்தார்.
படுகாயம் அடைந்த ரமேஷ் மற்றும் ஜெயக்குமார் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கயத்தார் இன்ஸ்பெக்டர் பொன்னரசு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காண்டிராக்டர் சிங்கராஜ் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மேஸ்திரி பாலசுப்பிரமணியத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications