நவாஸ் ஷெரீப் யார்...?

Subscribe to Oneindia Tamil

Nawaz Sharif back as PM in Pak's first govt change via ballot
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 3 வது முறையாக நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அந்த நாட்டின் வரலாற்றில் தேர்தல் வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பிரதமர் என்ற பெருமையும் நவாஸ் ஷெரீப்புக்கு கிடைத்திருக்கிறது!

பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த 66 ஆண்டு கால வரலாற்றில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எந்த அரசும் 5 ஆண்டுகள் நீடித்தது கிடையாது. ஆனால் தற்போதுதான் பாகிஸ்தான் மக்கள் கட்சி 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. மிக மோசமான வன்முறை, குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி 125 இடங்களைக் கைப்பற்றியது. இம்ரான்கானின் கட்சி 35 இடங்களிலும் ஆளும் கட்சி 32 இடங்களிலும் வென்றுள்ளன.இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் பிரதமராக 3வது முறையாக நவாஸ் ஷெரீப் பொறுப்பேற்க இருக்கிறார். அந்த நாட்டின் வரலாற்றில் தேர்தல் வாக்களிப்பு மூலம் பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

லாகூரில் கடந்த 1949ஆம் ஆண்டு பிறந்த நவாஸ் ஷெரீப் தொழிலதிபராக இருந்தவர். முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜியா உல் ஹக்கின் ஆதரவில் அரசியலில் குதித்தார். பஞ்சாப் மாகாணத்தின் நிதி அமைச்சராகவும் முதல்வராகவும் பொறுப்பு வகித்தவர். 1990இல் பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்த பின், ஊழல் புகாரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 1997இல் நவாஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் 2 ஆண்டுகள்தான் நீடிக்க முடிந்தது. 1999இல் முஷாரப் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார். அதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட நவாஸ், விடுதலையானதும் சவூதியில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்து 2007இல் பாகிஸ்தான் திரும்பினார். பாகிஸ்தான் மக்கள் கூட்சியுடன் கூட்டணி அமைத்து, முஷாரபை ஆட்சியில் இருந்து வெளியேறச் செய்தார். பேநசீர் புட்டோ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அனுதாப அலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் நவாஸ்.,

நவாஸ் ஷெரீப் 1999ல் தாம் ஆட்சியை விட்டு அகற்றப்பட்டபோது இந்தியாவுடன் இருந்த உறவுகளை மீண்டும் ஏற்படுத்த விரும்புவதாக ஏற்கெனவே கூறியுள்ளார். 1998ல் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது இந்தியா அணுகுண்டுச் சோதனையை நடத்தியது. அதற்குப் பதிலடியாக பாகிஸ்தானும் அணுகுண்டுச் சோதனையை நடத்தியது. இதனால் பதற்றம் ஏற்பட்டபோதும், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த வாஜ்பாயுடன் இணைந்து ஷெரீப் பணியாற்றினார். நவாஸ் ஷெரீப் ஆட்சிக்காலத்தில் தான் கார்கில் போரும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+