கடத்தப்பட்ட 7 கோடி ஆண்டு பழமையான டைனோசரஸ் படிமங்கள் :மங்கோலியாவிடம் ஒப்படைக்கிறது அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மங்கோலியாவிடமிருந்து கடத்தப்பட்ட 7 கோடி ஆண்டு பழமையான டைனோசரஸ் படிமங்களை திரும்ப ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு மங்கோலியா நாட்டிலிருந்து 7 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரஸ் எலும்புக்கூடுகளின் படிமங்கள் கடத்தப்பட்டன. இந்நிலையில் மங்கோலியா அரசு, டைனோசரஸ் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது.

இதனையடுத்து மங்கோலியாவில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்திவரப்பட்ட 10-க்கும் மேற்பட்ட டைனோசரஸ் எலும்புக்கூடுகளின் படிமங்களை திருப்பி கொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. திங்களன்று நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சியில் இவைகள் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாட்டின் கலாச்சார நலனை கொள்ளை அடிப்பவர்களையும், சதிகாரர்களின் செயலையும் அனுமதிக்க முடியாது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+