இவர்கள்தான் மதுக்கடையை திறக்கக் கோரி மறியல் செய்த 'மகான்கள்'...!

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் வருசநாடு அருகே மதுக் கடையைக் திறக்கக் கோரி ஆண்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக அதுகுறித்து நாளை ஊர் மக்களுடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே-மூலக்கடை கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டது. இக்கடையை அடைக்கவேண்டும் என கூறி பெண்கள் கடந்த வாரம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் கடையை பூட்டி பெண்களிடம் சாவியை ஒப்படைத்தனர். இதனால் ஊரில் உள்ள குடிகார ஆண்கள் கொந்தளித்தனர்.

Police to talk to villagers on the opening of Tasmac shop

மூடப்பட்ட மதுபானக்கடையை திறக்கவலியுறுத்தி நேற்று ஆண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

இந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக நாளை தீர்வு காண போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஊர் ஆண்களையும், பெண்களையும் காவல்நிலையத்திற்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

பார்க்கலாம்.. வெல்லப் போவது பெண்களா இல்லை குடிகாரர்களா என்று!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+