கல்யாண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மொய்ப்பணத்தை ஆட்டையைப் போட்ட திருடர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் திருமண மண்டபத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மொய்ப்பணத்தை அபகரித்துச் சென்று விட்டனர்.
சென்னை குரோம்பேட்டை சி.எல்.சி. சாலையில் நிறைய திருமண மண்டபங்கள் உள்ளன. அங்குள்ள ஒரு மண்டபத்தில் சேலையூரைச் சேர்ந்த ஹரிகரன் என்பவரது திருமணம் நடந்தது.
நேற்று இரவு திருமண வரவேற்பு நடந்தது. அப்போது பலரும் மொய் கொடுத்துச் சென்றனர். இந்த மொய்ப்பணத்தை ஒரு பேக்கில் போட்டு அதை மேடையின் பின்புறம் வைத்திருந்தனர். பின்னர் ஹரிகரனின் பெற்றோர் சாப்பிடச் சென்றனர்.
போய் விட்டு வந்து பார்த்தபோது மொய் இருந்த பேக்கைக் காணவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications