மனைவியை சக அதிகாரிகளுக்கு விருந்தாக்கிய கடற்படை அதிகாரி- விசாரணைக்கு ஏ.கே. ஆண்டனி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமது மனைவியை சக அதிகாரிகளுக்கு விருந்தாக்கியதாக கடற்படை அதிகாரி மீது கூறப்படும் புகார் தொடர்பாக விசாரணை நடத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி உத்தரவிட்டிருக்கிறார்.

கார்வார் கடற்படை கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் லெப்டினன்ட் கமாண்டராக பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.பி.ஏ. பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட நாள் முதலே தம்மை கணவர் சித்ரவதை செய்து வருவதாகவும் ரூ65 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும் உச்சகட்டமாக கணவருடன் பணியாற்றும் சக அதிகாரிகளுடன் உடலுறவு கொள்ள கணவரே வற்புத்துவதாகவும் கடற்படை தலைமையகத்துக்கு அதிர்ச்சி அளிக்கும் புகாரை அவர் அனுப்பி வைத்தார். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனிக்கும் இது தொடர்பான புகார் கடிதம் ஒன்றையும் அந்த பெண் அனுப்பி வைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அந்த அதிகாரி மீது விசாரணை நடத்த கடற்படைக்கு ஏ.கே. ஆண்டனி உத்தரவிட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாக நாட்டின் கடற்படையில் அடுத்தடுத்து இதுபோல் 'தகாத' உறவு சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+