புனே சிறையில் அல்ல.. மும்பை தடா கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் சஞ்சய் தத்

Subscribe to Oneindia Tamil

Will Sanjay Dutt surrender directlty at jail?
மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மீதமுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்கப் போகும் இந்தி நடிகர் சஞ்சய் தத் நேரடியாக சிறைக்கே போய் சரணடையவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் நாளை அவர் மும்பை தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைகிறார்.

அதன் பின்னர் அவர் புனே எரவாடா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்படுவார்.

முன்னதாக நேரடியாக சிறையில் சரணடைய தனக்கு அனுமதி தர வேண்டும் என மும்பை தடா கோர்ட்டில் அவர் மனு செய்திருந்தார். இந்தமனுவை இன்று அவர் திரும்பப் பெற்றார்.

தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் சிறைக்கு நேரடியாகப் போய் சரணடைய விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

சஞ்சய் தத் நடிப்பில் சில படங்கள் உருவாகி வந்தன. அதில் சுப்ரீம் கோர்ட்டில் அவகாசம் வாங்கி 2 படங்களை முடித்துக் கொடுத்து விட்டார் தத். இன்னும் 2 படங்கள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+