கர்நாடகத்தில் பந்த்: தமிழக பேருந்துகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தம்

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த சித்தராமையா முதல்வராக பதவியேற்றார்.
இதற்கு கர்நாடகா மாநில மூத்த காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக நேற்று கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் பந்த் நடத்தினர். இதனால் தமிழக பேருந்துகள் கர்நாடகா எல்லைக்குள் செல்ல முடியாமல் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த பந்த் காரணமாக,தமிழகத்தில் இருந்து நேற்று மாலை வரை கர்நாடகா மாநிலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தமிழகத்தில், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கர்நாடகா செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் பல்வேறு வாகனங்களை நேற்று காலை முதல் மாலை வரை செல்ல தமிழக போலீசார் தடை விதித்தனர்.
மாலை 6 மணிக்கு மேல் கர்நாடகாவில் பதட்டம் தணிந்ததும், வழக்கம் போல் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தமிழக பேலீசார் அனுமதி அளித்தனர்.












Click it and Unblock the Notifications