Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வி.ஏ.ஓக்களுக்கு அலுவலகத்துடன் குடியிருப்புகள்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Jaya announces quarters for VAOs
சென்னை: 114 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள் கட்டித் தரப்படும் என்றும், மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் 25 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் இன்று அறிக்கை வாசித்த ஜெயலலிதா கூறியதாவது: வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புதிய மாவட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக கிராம நிருவாக அலுவலர்களை நியமித்தல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள வருவாய் வட்டங்களில், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட வட்டங்களை பிரிக்க பரிந்துரை செய்யும் வகையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு 4 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட 62 வட்டங்களை கண்டறிந்து அவற்றில் 51 வட்டங்களை முதலில் பிரிக்க பரிந்துரை செய்துள்ளது. அதில் முதற்கட்டமாக மாநகரப் பகுதியில் உள்ள வட்டங்களை பிரிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

சென்னையில் புதிய வட்டங்கள்

அதன்படி, இந்த நிதியாண்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள கோட்டை - தண்டையார்பேட்டை வட்டத்தினை பிரித்து புரசைவாக்கத்தில் ஒரு புதிய வட்டமும்; புரசைவாக்கம்-பெரம்பூர் வட்டத்தினை பிரித்து அயனாவரத்தில் ஒரு புதிய வட்டமும்; எழும்பூர்-நுங்கம்பாக்கம் வட்டத்தினை பிரித்து அமைந்தகரையில் ஒரு புதிய வட்டமும்; மைலாப்பூர்-திருவல்லிக்கேணி வட்டத்தினை பிரித்து வேளச்சேரியில் ஒரு புதிய வட்டமும்; மாம்பலம் -கிண்டி வட்டத்தினை பிரித்து கிண்டியில் ஒரு புதிய வட்டமும் உருவாக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் வட்டத்தினை பிரித்து திருவொற்றியூரில் ஒரு புதிய வட்டமும்; அம்பத்தூர் வட்டத்தினை பிரித்து மதுரவாயலில் ஒரு புதிய வட்டமும் உருவாக்கப்படும்.

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வட்டத்தினை பிரித்து திருப்பூர் (தெற்கு) என்ற ஒரு புதிய வட்டமும்; அவினாசி வட்டத்தைப் பிரித்து ஊத்துக்குளியில் ஒரு புதிய வட்டமும்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி வட்டத்தினை பிரித்து திருச்சிராப்பள்ளி (கிழக்கு) என்ற ஒரு புதிய வட்டமும்; மணப்பாறை வட்டத்தைப் பிரித்து மருங்காபுரியில் ஒரு புதிய வட்டமும் உருவாக்கப்படும்.

மதுரை மாவட்டம், மதுரை (தெற்கு) வட்டத்தினை பிரித்து திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை (மேற்கு) ஆகிய இரு புதிய வட்டங்களும்; மதுரை (வடக்கு) வட்டத்தினை பிரித்து மதுரை (கிழக்கு) என்ற புதிய வட்டமும் உருவாக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் (தெற்கு) வட்டத்தினை பிரித்து பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய இரு புதிய வட்டங்களும்; சேலம் மாவட்டம், சேலம் வட்டத்தினை பிரித்து சேலம் (மேற்கு) மற்றும் சேலம் (தெற்கு) ஆகிய இரு புதிய வட்டங்களும் உருவாக்கப்படும்.

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டத்தினை பிரித்து அணைக்கட்டில் ஒரு புதிய வட்டமும்; திருப்பத்தூர் வட்டத்தை பிரித்து நாட்றாம்பள்ளியில் ஒரு புதிய வட்டமும்; கரூர் மாவட்டம், கரூர் வட்டத்தைப் பிரித்து மண் மங்கலத்தில் ஒரு புதிய வட்டமும்; விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டத்தைப் பிரித்து, விக்ரவாண்டியில் ஒரு புதிய வட்டமும்; கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டத்தைப் பிரித்து, வேப்பூரில் ஒரு புதிய வட்டமும்; தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தைப் பிரித்து பூதலூரில் ஒரு புதிய வட்டமும்; திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வட்டத்தைப் பிரித்து, திண்டுக்கல் (மேற்கு) என்ற புதிய வட்டமும் என மொத்தம் 25 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

34 வருவாய் வட்டங்கள்

கடந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட 9 புதிய வருவாய் வட்டங்கள் மற்றும் தற்போது உருவாக்கப்பட உள்ள 25 புதிய வருவாய் வட்டங்கள் ஆகியவற்றை சேர்த்து கடந்த இரண்டாண்டு காலத்தில் 34 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடிப்படை கட்டமைப்பு வசதிகள்

அதிக அளவு வருவாய் வட்டங்களை மட்டும் உருவாக்கினால் போதுமானதல்ல, அந்த வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு உரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம், திருவள்ளுர் மாவட்டத்தில் மாதவரம், திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் ஆகிய ஆறு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மொத்தம் 16 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

இதே போன்று, நடப்பாண்டில் 20 வருவாய் ஆய்வாளர்களுக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் தலா 14 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிராம நிர்வாக அலுவலர்கள்

பொதுமக்கள் குறு வட்ட அளவர்களை எளிதாக தொடர்பு கொள்ள வசதியாக, மொத்தமுள்ள 1,136 குறு வட்டங்களில், 100 குறு வட்டங்களில் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் தலா 14 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் குறு வட்ட அளவர்களின் பயன்பாட்டிற்காக கட்டப்படும்.

இது மட்டுமல்லாமல், நடப்பாண்டில் 114 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள் தலா 8 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென 9 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், 5,000 கிராம நிர்வாக அலுவலகக் கட்டடங்கள் 25 கோடி ரூபாய் செலவில் நடப்பாண்டில் புதுப்பிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+