கோடீஸ்வரர் ஆன அயோத்தி ராமர்...

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ளது ராம் லாலா விராஜ்மான் ஆலயம். பால ராமர் இங்கு பிறந்து வளர்ந்தார் என்று கூறப்படுவதை ஒட்டி இந்த ஆலயம் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2005-06 ம் ஆண்டு இந்த ஆலயத்தின் கணக்கில் வெறும் 7 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது. தற்போது இந்த ஆலயத்தின் கணக்கில் அதாவது ராமர் பெயரில் 2.7 கோடி ரூபாய் உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அயோத்தி பிராஞ்ச் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது ஏழு ஆண்டுகளில் கோவில் வருமானம் 40 மடங்கு அதிகரித்துள்ளதாம். அந்த அளவிற்கு பக்தர்கள் ஆலயத்திற்கு நிதி உதவிகளை அள்ளி வழங்குகின்றனராம்.
இந்த பணம் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் கீழ் போடப்பட்டு ஆலய பராமரிப்புக்கு செலவழிக்கப்படுகிறது. ராமர் கோவிலில் முதன்மை பூசாரியாக உள்ளவருக்கு 6 ஆயிரம் ரூபாயும், அவருக்கு துணையாக உள்ள 4 பூசாரிகளுக்கு 3,800 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications