வீட்டிற்கு வந்த மருமகளை வேலைக்காரி போல் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கணவனது கொடுமையால் மனைவி இறந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் மருமகள்களை எரித்துக்கொலை செய்வது மற்றும் கொடுமைப்படுத்துவது அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. எந்த காரணத்திற்காகவும் வீட்டிற்கு வந்த மருமகளை வீட்டிலிருந்து வெளியேற்றக்கூடாது.
வீட்டிற்கு வந்த மருமகளை குடும்பத்தின் ஒரு உறுப்பினராக கருத வேண்டும் அவர்களிடம் பாரபட்சத்துடன் நடந்துகொள்ளக் கூடாது. பெண்களை மதிக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், எதிர்காலத்தில் வரதட்சணைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பெண்களை துன்புறுத்தக் கூடாது என கருத்து தெரிவித்தனர். வீட்டிற்கு வந்த மருமகளை வேலைக்காரி போல நடத்தக்கூடாது எனவும் எச்சரித்தனர்.
மேலும் இவ்வழக்கில் மனைவியை துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications